Showing posts with label Kadhal Kavithaikal. Show all posts
Showing posts with label Kadhal Kavithaikal. Show all posts

Saturday, 26 July 2014

நீ தரும் பதில்கள்....

கேள்விகளுக்கான விடை கிடைக்கும்
என்ற நம்பிக்கையிலேயே.......
கேள்விகளை கேட்கிறேன் உன்னிடத்தில்,
என்னுல் மிண்டும் ஒரு
கேள்வியையே விதைக்கிறது.....
நீ தரும் பதில்கள்..

Wednesday, 18 June 2014

காதல்னா என்ன...?????

காதல்னா என்ன...?????
ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...
அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...

Infatuation

ஒரு பொண்ண விட்டு நீங்க விலக கூடாதுன்னு மத்தவங்க நெனக்கிறாங்க ..
அதனால அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...

compromise

நாம விலகி போயிட்டா அந்த பொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு
நீங்க அவள காதலிக்கிறேன்னு நெனச்சா, அது காதல் இல்ல..

Charity

எல் லா விஷயத்தையும் அவ கிட்ட பகிர்ந்துக்கிறேன்...
அதனால அவள நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...

Pure Friendship

ஆனா.... அவளோட துக்கங்கள் அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு
அவளுக்காக நீங்க கண்ணீர் விட்டா...


அது தான் காதல்...


வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்...
எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ...

அது தாங்க தெய்வீக காதல்...!!!

Monday, 16 June 2014

Tamil quotes

தன் அழகை திமிராகக் காட்டாமல் ஆண்களை மதித்து நடக்கும் போது தான் பெண் அழகானவள் ஆகிறாள் ஆண்களின் கண்களுக்கு....!!



Saturday, 14 June 2014

கரை சேர்வேனோ???


காதல் ஒரு காகித கப்பல் பயணம் அதில்
கரை சேர்ந்தவர்கள் சிலர்....
முழ்கி முச்சு முடியவர்கள் பலர் அதில்
உன்னால் நானும் ஒருவன்......

Friday, 13 June 2014

நினைவுகளுடன்....

செடிகள் வருந்துவதில்லை, பூக்கள் உதிர்வதை பார்த்து
மறுநாள்,
பூக்கும் என்ற நம்பிக்கையில் !!
நானும் வருந்தவில்லை,
நீ என்னை பிரிந்து சென்றதை நினைத்து ,
என்னை புரிந்து,
திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில் !!
என்றும் உன் நினைவுகளுடன்....

Thursday, 12 June 2014

குழப்பங்கள்......

அவள் பேசமாட்டால் என்று
மூளை சொல்லும்....
இல்லை
அவள் பேசுவாள் என்று
இதயம் சொல்லும்.....
குழப்பங்கள் உன்னை தெளிவாய்
குழப்பும்.....
காத்திருப்பாய் காலம் அவளிடம் உன் காதலை உணர்த்தும் வரை.....
இறுதியில் நீ அழுகிறாய் என்று
உன்  கண்ணிர் சொல்லும்...
காதல் எதுவும் செய்யும்......

Wednesday, 11 June 2014

English Love SMS Collections......

When time comes for u to give ur heart to someone,
make sure u select someone who will never break ur
heart,
Bcuz broken hearts
Never have spare parts.


Don't  cry in Love Bcoz 4 whom u r crying does not deserve ur tears
&
The person who deserves it will never let u cry!!!


Life is an echo; all comes back, The Good, The Bad, The False,
And The True.
So,
give the world the best u have &
The BEST will come back to u.


The smile is like a simcard & life is like cellphone,
whenever u insert the simcard of a smile,
A Beautiful day is activated Keep Smiling.<3 <3 <3


In life when you get troubles, don't get nervous...
Just close your eyes and follow ur heart...
Bcoz heart may be in left....
But it is always right.....

Tuesday, 10 June 2014

உன் வருகைகாக...!!

நீ விட்டு சென்ற இடத்திலேயே காத்துகிடகிறோம்,
நானும்,
என் காதலும்.
உன் வருகைகாக...!!

Monday, 9 June 2014

வெறுக்க முடியாமல் தவிக்கிறேன்.....!

நீ ஏற்பாடுத்தி சென்ற வலியும்,காயங்களும் என்னுல் அதிகம்,
அதை சுகமான உன் நினைவுகளுடன் அசைபோடுகிறேன்...
அதனால் தான்....?
ஏனோ என்னால் உன்னை வெறுக்க முடியாமல் தவிக்கிறேன்.....!

கோழை (வீரன்)

நீ பிரிந்து சென்றதால் 
தற்கொலை செய்யும் அளவுக்கு 
நான் ஒன்றும் கோழை (வீரன்) இல்லை,
நீ ஏற்பாடுத்தி சென்ற காயங்களுடனும்,ரணங்களுடனும் வாழ்வேன், 
என்று முடியும் இந்த வாழ்க்கை 
என்ற ஏக்கத்துடன்....

Sunday, 8 June 2014

ஹைக்கூ கவிதைகள்.......

நெடுநாட்களாய் அவளின் நினைவுகளின் வாசம்,
இதயக் கூட்டின் ஒவ்வொரு துகளிலும்
வீசிக்கொண்டுகிறது.........




என்னை தேடி வந்த உன்னை தொலைத்துவிட்டு.... 
தேடி அழைகிறேன் என்னை....!!!!




நாம் இருவரும்......
இனைந்து தொடங்கி பாதியில் விட்டு சென்ற 
""ஓவியம்""
 நாம் காதல்.....!!!

விடைக்கான விடியல்.....

பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்...
சில நாள் துன்பம்
உன்னை நேசித்ததால்..
விடுகதையான வாழ்க்கை
விடை கிடைக்காமல் நான்...
விடை செல்வாய் என்ற
ஏக்கத்துடனே தொடங்குகிறேன்.......
ஒவ்வொரு விடியலையும்....

Saturday, 7 June 2014

(சு)வடுக்களாய்....

தொலைதூர வெளிச்சமாய்,
நெஞ்த்தின் சுவரொத்தில்,
நீங்கா (சு)வடுக்களாய்....
அவளின் நினைவுகள்..

தூர தேசப் பயணம்........

வாழ்க்கையெனும் தூர தேசப் பயணத்தில்,
பல இனிமையான தருணங்களை கண்டதும் உண்டு,
பற்பல தடை கற்களையும் கடந்து வந்ததும் உண்டு,
ஆனால்...???
நீ இல்லாமல் போகும் தருணங்களில் உணரும் வெறுமையான நிமிடங்களை...!!!
கடந்து வருவது தான் மிக சவாலாக உள்ளது.....

Thursday, 29 May 2014

வெறுக்கிறேன்.......



ஒரு கோட்டில் பயணித்து கொண்டிருந்த நாம்,
இரு கோடாய் பயணம் தொடங்கிய நாட்கள் முதல்,
நீ என்னை விட்டு விலகிச் செல்வதை புரிந்துகொண்டு,
என் நிழலும் என்னோடு பயணிப்பதை வெறுக்கிறது,

உண்மையாய் இரு.......!!!

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட ஏமாந்து விட்டேன் என்ற கவலை தான்
என்னை தினம் தினம் கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம்
இடம் இல்லை...
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை அதனால் தான் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய் நடந்து கொள் என்னிடம் அல்ல ...
இனிமேல் உன்னுடன் இருக்கப் போகிறவர்களிடம்...!

Wednesday, 28 May 2014

Tamil Photo Kavithaikal Collections








வரங்கள்........

எல்லோருக்கும் நிழல் தரும் குடை,
எனக்கு மட்டும் வெயில் தருகிறது,
எல்லோருக்கும் மழை தரும் வானம்,
எனக்கு மட்டும் கண்ணிர் தருகிறது,
எல்லோருக்கும் இனிமை தரும் பசுமையான நினைவுகள்,
எனக்கு மட்டும் சுமையை தருகிறது,
எல்லோரையும் சுகமாய் வருடும் தென்றல் காற்று,
என்னை மட்டும் சுடுகிறது,
இன்னும் எனக்காக என்ன என்ன வரங்கள் உண்டோ...??
நீ இல்லாத என் வாழ்க்கையில்...??

Tuesday, 27 May 2014

கடந்த இரவுகள்....

வெறுமையான இரவுகள் ஒவ்வொன்றும்....??
அவளின் நினைவுகளுடன் கடந்து போகிறது என்னை.....!!!

உடனடி தேவை....!!!

படித்ததில் பிடித்தது..... 

நீதியைக் காக்கும் நீதிபதிகள், பேராசையில்லாக் கல்வியாளர்கள்,
சோரம் போகாத அதிகாரிகள்,
சிந்திக்கும் நல்ல மக்கள்,
உடனே தேவை.....!!!
விவரங்களுக்கு அனுகவும்
              இந்தியா....!!!!!